27.8 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டக்களப்பு வந்தாறுமூலை விஸ்ணு மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் பரிசளிப்பு நிகழ்வு

மட்டக்களப்பு வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் ஏர் சஞ்சிகை வெளியீடும் நிகழ்வும்
பாடசாலை அதிபர் திரு.கி.சிவலிங்கராஜா தலைமையில் இன்று
நடைபெற்றது.
பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்து கொண்டார்.
சிறப்பு அதிதியாக கல்குடா கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ச.தட்சணாமூர்த்தியும், விசேட அதிதிகளாக கிழக்கு பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ப.இளங்கோ, வைத்தியர் இ.சிறிநாத் ஆகியோர் பங்கேற்றனர்.
பிரதேசத்தின் மண் வாசனை கமலும் கலாச்சார பண்பாட்டு,விழுமியங்களை பிரதிபலித்துக் காட்டும் வகையில் ஆசிரியர்கள்,மாணவருடைய ஆங்கங்கள் கொண்டதான ‘ஏர்’ சஞ்சிகை
வெளியிட்டு வைக்கப்பட்டது.
நூலின் ஆய்வுரையினை ஒய்வு நிலைக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் அ.சுகுமாரன் தொகுத்து வழங்கினார்.
விளையாட்டு,கலை. பண்பாட்டு.மாணவர்களின் பாட அடைவு,பல்கலைக் கழகத் தெரிவு போன்றவற்றில் ஆர்வம் செலுத்தி சாதனைகளைப் படைத்த
மாணவர்கள் சான்றிதழ்கள் வழங்கிக் கொளரவிக்கப்பட்டனர்.
பொறியியல்,விஞ்ஞானம்,கலை,வர்த்தக பிரிவுகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு விஷ்ணு விருது வழங்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles