மட்டக்களப்பு வாழைச்சேனை கொரிசேன் உதைபந்தாட்ட அக்கடமியின் பயிற்சி நடவடிக்கைகள், இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் க.மகசேனால் நேற்று
ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் உட்பட இலங்கையின் முன்னனி உதைபந்தாட்ட பயிற்றுவிப்பாளர்களும்
நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கல்குடா தொகுதியில் கல்வி கற்கும் மாணவர்களின் உதைபந்தாட்டத் திறனை மேம்படுத்தும் வகையில், இங்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.