28.4 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டு.கல்லடி புனித அந்தோனியார்
சிற்றாலய வருடாந்த திருவிழா

மட்டக்களப்பு கல்லடி புனித அந்தோனியார் சிற்றாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று இடம்பெற்ற கூட்டுத்திருப்பலியுடன் திருவிழா கொடியிறக்கப்பட்டு நிறைவு ளபெற்றது .

நான்கு நாட்கள் திருவிழாவாக சிறப்பிக்கப்பட்ட கல்லடி புனித அந்தோனியாரின் சிற்றாலயத்தின் பெருவிழா திருப்பலி மட்டக்களப்பு இயேசு சபை மேலாளர் அருட்தந்தை டி .சகாயநாதன் எஸ்.ஜெ.அடிகளாரின் தலைமையில் அருட் தந்தையர்கள் இணைந்து இன்று ஒப்புக்கொடுத்தனர் .

கடந்த இரண்டு ஆண்டுகள் நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரண சூழ் நிலை காரணமாக கல்லடி டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலயத்துடன் இணை ஆலயமான கல்லடி புனித அந்தோனியார் சிற்றாலயத்தின் திருவிழா நிகழ்வுகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது சுமுகமான நிலையின் ஆலய நிர்வாக சபை உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் கல்லடி டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலய பங்கு தந்தை லோரன்ஸ் லோகநாதன் அடிகளாரின் தலைமையில் கடந்த 23 ஆம் திகதி ஆலய திருவிழா கொடியேற்றப்பட்டு நான்கு நாட்கள் திருவிழாவாக சிறப்பிக்கப்பட்டு இன்று இடம்பெற்ற கூட்டுத்திருப்பலியினை தொடர்ந்தது புனிதரின் திருச்சுருவ ஆசீருடன் கொடியிறக்கப்பட்டு 2022 ஆம் ஆண்டுக்கான திருவிழா நிறைவுபெற்றது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles