நாடளாவிய ரீதியில் இன்றய தினம் இரவு 11 மணி முதல் பயணத்தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதை அடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி, பட்டிருப்பு பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையங்களில் மக்கள் பொருட்களை மும்முரமாக கொள்வனவு செய்ததை அவதானிக்க முடிந்தது.
இந்நிலையில் தனியார் மற்றும் அரச வங்கிகளிலும், கொடுக்கல் வாங்கல்களுக்காக மக்கள் மிக நீண்ட வரிசையில் நின்றதையும் காணக்கூடியதாக இருந்தது.