சமுர்த்தி சௌபாக்கியா வாரத்தை முன்னிட்டு மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள காத்தான்குடி சமூர்த்தி வங்கியினால் சத்தி பயனாளிகளுக்கான வாழ்வாதார கடன் உதவிகள் இன்று வழங்;கப்பட்டன
காத்தான்குடி. ஏ வலய வங்கி சமுர்த்தி முகாமையாளர் எஸ்.எச்.முசம்மில் தலைமையில் வங்கிச் சங்க கட்டிடத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ. உதய ஸ்ரீதர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கான கடன் உதவிகளை வழங்கி வைத்தார்
இந்த வைபவத்தில் காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.எம். மஜீத் சமூர்த்தி திட்ட முகாமையாளர் திருமதி சுகந்தி கண்ணன் உட்பட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பயனாளிகள் கலந்து கொண்டனர்
இதன்போது 4ன காத்தான்குடி ஏ வாரியத்தில் சமுர்த்தி வங்கியினால் ஐந்து பேருக்கு 4 லட்சம் ரூபா நிதி வழங்கிவைக்கப்பட்டது