மட்டு.காத்தான்குடியில் சந்தேகநபர்
ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

0
212

மட்டக்களப்பு ஏறாவூரிலிருந்து காத்தான்குடிக்கு ஐஸ் போதைப் பொருளை கடத்திய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.சந்தேக நபரிடமிருந்து 10 கிறாம் 150 மில்லி கிறாம் ஐஸ் போதைப் பொருளையும் கைப்பற்றியுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பொலிஸ் நிலைய விஷேட பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகார் ரஹீம் வழ்காட்டலில் விஷேட பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகளான எம்.ரி.எம்.தாஹா, என்.சந்திரகாஜன் ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினர் காத்தான்குடி ஆறாம் குறிச்சி பிரதான வீதியை அன்மித்த வீதியில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப் பொருளையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம் பெற்று வருவதாகவும் காத்தான்குடி பொலிசார் மேலும் தெரிவித்தனர்.