மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிவிலுள்ள புணானை ,ஜெயந்தியாய மற்றும் றிதிதென்ன ஆகிய பிரதேசங்களுக்கு திம்புலாகல ராகுலாங்கார நாகினி தேரர் இன்று காலை திடிர்விஜயம் மேற்கொண்டார்.குறித்த பகுதிகளில் புகையீரத பாதையை ஊடறுத்து செல்லும் அரச காணிகளை அப் பிரதேசங்களைச் சேர்ந்த சிலர் சட்ட விரோதமான முறையில் அபகரித்து வருவதாக பிரதேச மக்கள் விடுத்த வேண்டுகேளை அடுத்து திம்புலாகல ராகுலாங்கார நாகினி தேரர் அப்பகுதிக்கு விஜயம் செய்து நிலைமைகளை கண்காணித்தார். புணானை பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் சிலருடன் தேரர் குறித்த இடங்களுக்கு சென்று காணிகளில் கட்டடம் கட்டுவோர் மற்றும் சுற்று வேலி இடுவோரிடம் விடயம் தொடர்பாக கேட்டறிந்து கொண்டார்.
காணி பங்கீடு தொடர்பில் பக்கச் சார்பில்லாமல் மூவின மக்களுக்கும் குறித்த காணியினை பங்கீடு செய்து வழங்கமாறு இதன்போது தேரர் கேட்டுக்கொண்டனர்.கடந்த ஒரு வார காலமாக புணானை தொடக்கம் றிதிதென்னை வரையுமான சுமார் 10 கிலோ மீற்றர் தூரமுள்ள காணிகள் அபகரிக்கப்படும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் நிலையில்
சம்பந்தப்பட்ட புகையிரத திணைக்களமும் மௌனம் காத்து வருவதாக பிரதேச மக்கள் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.