மட்டக்களப்பு- பன்குடாவெளி சவக்காலையொன்றில் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலொன்றுக்கு அமைய தேடும் பணி முன்னெடுக்கப்பட்டது.
![](https://eelanadu.lk/wp-content/uploads/2021/05/2-25.png)
வவுணதீவு விசேட அதிரடிப்படையினர் மற்றும் கரடியனாறு பொலிஸாரும் இணைந்து இயந்திரத்தின் உதவியுடன் அவ்விடத்தை தோண்டும் பணிகளில் ஈடுபட்டனர்.
![](https://eelanadu.lk/wp-content/uploads/2021/05/1-26.png)
குறித்த இடத்தில் விடுதலைப் புலிகளால் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் புதைக்கப்பட்டிருப்பதாக பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம் தோண்டுவதற்கு அனுமதி வழங்கியிருந்தது.
![](https://eelanadu.lk/wp-content/uploads/2021/05/6-8.png)
சவக்காலையின் கல்லறைகளுக்கு அருகில் தோண்டப்பட்டபோதிலும் எவ்வித வெடிபொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லையென படையினர் தெரிவித்தனர்.
![](https://eelanadu.lk/wp-content/uploads/2021/05/5-15.png)
சுமார் இரண்டு மணிநேரமாக சவக்காலையின் பல இடங்கள் தோண்டப்பட்டபோதும் எவ்வித தடயங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை.
![](https://eelanadu.lk/wp-content/uploads/2021/05/4-23.png)