மட்டக்களப்பு சிறைச்சாலை சிறைக்கைதிகள் நலன்புரிச்சங்கத்தின் மாதாந்த கூட்டமும் புதிய சிறைச்சாலை அத்தியட்சகரை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு நேற்று மாலை மட்டக்களப்பு சிறைச்சாலையில் நடைபெற்றது .
சிறைக்கைதிகளின் நலன்புரிச்சங்கத்தின் தலைவர் என். பி .ரஞ்சன் தலைமையில் நடைபெற்ற நலன்புரிச்சங்கத்தின் மாதாந்த கூட்டத்தின் ஆரம்ப நிகழ்வாக சிறைச்சாலை புதிய அத்தியட்சகருக்கான வரவேற்பளிக்கப்பட்டது.
இதன்போது சிறைச்சாலை புதிய அத்தியட்சகர் என் .பிரபாகரன் வரவேற்று கௌரவிக்கும் வகையில் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டார். தொடர்ந்து இறை வணக்கத்துடன் ஆரம்பமான நலன்புரிச்சங்கத்தின் மாதாந்த கூட்டத்தில் மட்டக்களப்பு சிறைச்சாலை சிறைக்கைதிகள் நலன்புரிச்சங்கத்தினால் சிறைக்கைதிகள் நலன் தொடர்பாக முன்னெடுத்து வரும் அபிவிருத்தி திட்டங்கள் சிறைச்சாலையின் புதிய அத்தியட்சகரின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகளுடன் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள சிறைக்கைதிகளின் நலன் , தொடர்பான வேலைத்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் குறித்த சங்கத்தின் 5 பேர் கொண்ட புதிய குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.இக்கூட்டத்தில் பிரதான ஜெயிலர் மோகன்ராஜ் மற்றும் சிறைசாலை உத்தியோகத்தர்கள் .சிறைச்சாலை சிறைக்கைதிகள் நலன்புரிச்சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்