வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்தில் சிறுவர், முதியோர் தின நிகழ்வுகள் பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் போரதீவுப்பற்று கோட்டக்கல்வி அதிகாரி அருள்ராசா, உட்பட போரதீவுப்பற்று பிரதேச செயலக சிறுவர் நன்னடத்தை உத்தியொகத்தர், கிராம முன்னேற்றச்சங்கத் தலைவர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
சகல பிள்ளைகளுக்கும் சிறந்ததொரு எதிர்காலம் எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற நிகழ்வில் முதியோர்கள், சிறுவர்கள் பரிசுப்பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் கலை மகள் கலை விழா இன்று வித்தியாலய உயர்தர மாணவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அதிபர் க.செல்வராசா, பிரதி அதிபர்களான சண்;முகநாதன், புவனேஸ்வரி இராதகிருஸ்ணன் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள், கல்வி சார ஊழியர்கள் கலந்து கொண்டனர்.மாணவர்களின் நாடகம், நடனம், வில்லுப்பாட்டு, கோலாட்டம், Nபுhன்ற கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றம் செய்யப்பட்டதுடன் வாணிவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுப்போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்களின் ஆற்றுகைகளும் நடைபெற்றது.