மத்திய மாகாணத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 20,000ஐ கடந்தது

0
381

மத்திய மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 20,478 ஆக உயர்வடைந்துள்ளது.

இதற்கமைவாக கடந்த 24 மணித்தியாலத்தில் 287 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்று, மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயம் அறிவித்துள்ளது.

இதுவரை கண்டி மாவட்டத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைவாக கண்டி மாவட்டத்தில் 13,915 தொற்றாளர்களும் மாத்தளை மாவட்டத்தில் 4,573 தொற்றாளர்களும், நுவரெலியா மாவட்டத்தில் 4,990 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை மத்திய மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 384ஆக உயர்வடைந்துள்ளது.

கண்டி மாவட்டத்தில் 235 தொற்றாளர்களும் மாத்தளை மாவட்டத்தில் 75 தொற்றாளர்களும், நுவரெலியா மாவட்டத்தில் 74 தொற்றாளர்களும் மரணமடைந்துள்ளனர்.