மத்துகம பிரதேசத்தில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை

0
107

களுத்துறை மத்துகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பின்னகொட பிரதேசத்தில், நபரொருவர் நேற்று முன்தினம் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று மத்துகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பின்னகொட, அகலவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயது நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இருவருக்கு இடையிலான முறுகலே இந்த சம்பவத்துக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த நபரை வேத்தேவ வைத்தியசாலையில் அனுமதித்தப்போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.