மன்னாரில் 17 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட 23, 18, 17 வயதுகளையுடைய இளைஞர்கள் மூவரையும், எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள கிராமம் ஒன்றில் 17 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய மூவர் மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரின் தாயாரால் மன்னார் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமைய மன்னார் பொலிஸார் குறித்த சந்தேக நபர்கள் மூவரையும் கைது செய்து, மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் குறித்த சந்தேக நபர்கள் மூவரையும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.