மன்னாரில் துப்பாக்கிச்சூடு, இரு இளைஞர்கள் உயிரிழப்பு!

0
176

மன்னார் – பாப்பாமோட்டை முள்ளிக்கண்டல் பகுதியில் இன்று காலை மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது, இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில், குறித்த இரு இளைஞர்களும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் மன்னார் நொச்சிக்குளம் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சன்னார் கிராமத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

துப்பாக்கிச்சூட்டுச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.