மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டம் நேற்று மாலை மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட அனைத்து முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் கே.திலீபன் மற்றும் முப்படையினர், திணைக்கள தலைவர்கள் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
மன்னார் மாவட்டத்தில், வட கீழ் பருவப் பெயர்ச்சி காலத்தில் ஏற்படவுள்ள அனர்த்தங்களை குறைப்பது தொடர்பாகவும் அதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது? அனர்த்தம் ஏற்பட்டால் எவ்வாறு தடுப்பது என்பது குறித்தும் கலந்துரையாடல் இடம்பெற்றது. மன்னார் மாவட்டம் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகின்ற போது இயற்கை அனர்த்தங்களின் போது பாதிப்புக்கு உள்ளாகும் ஓர் பகுதியாக காணப்படுகின்றமையின் காரணமாக அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.