மலையக ரயில் சேவைகள் தடை!

0
94

பட்டிப்பொல மற்றும் ஒஹிய ரயில் நிலையங்களுக்கு இடையில் தண்டவாளத்தின் குறுக்கே மரங்கள் முறிந்து வீழ்ந்தமையினால் மலையக மார்க்கத்தில் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளன.

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற உடரட்ட மெனிகே விரைவு ரயில் பட்டிப்பொல மற்றும் ஒஹிய ரயில் நிலையங்களுக்கு இடையில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறிந்து விழுந்த மரங்களை அகற்றும் பணியில் ரயில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், குறித்த மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதமாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.