மித்தெனிய ஜூலம்பிட்டிய பகுதியில் உந்துருளியொன்றில் பயணித்த தம்பதியினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த தம்பதியினர் நேற்றிரவு தங்களது வர்த்தக நிலையத்திலிருந்து வீடு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உந்துருளியை செலுத்திய நபர், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்ததுடன், உந்துருளி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த அவரது மனைவியும் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த இருவரும் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.