இன்று முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை, நாளாந்தம் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும், மின் துண்டிப்பை மேற்கொள்ள, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக, அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, ஏ முதல் எல் வரையான மற்றும் பி முதல் டபிள்யூ வரையான வலயங்களுக்கு, காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை 2 மணித்தியாலங்களும், மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை, ஒரு மணித்தியாலயமும் 20 நிமிடங்களும், நாளாந்தம், சுழற்சி முறையில், மின் துண்டிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.
அத்துடன், கொழும்பு முன்னுரிமை பகுதிகளுக்கு, குறித்த காலப்பகுதியினுள், காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை 3 மணித்தியாயம், மின் துண்டிப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாக, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.