மின் துண்டிப்பு இல்லை!

0
247

நாட்டில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இரண்டு வாரங்களுக்கு காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையான காலப்பகுதியினுள் மின்துண்டிப்பை மேற்கொள்ளாதிருக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு வாரங்களில் இணையவழியில் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஏதுவான வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.