காசாவில், இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் பாடசாலையொன்றின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் சுமார் 20 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட பலர் காயமடைந்துள்ளதாகவும் அந்த நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் தமது இராணுவ நடவடிக்கைகளை முடக்கிவிட்ட நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.