மீண்டும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான அனுமதியை இடைநிறுத்தியது வடகொரியா!

0
36

வடகொரியாவில் ஐந்து ஆண்டுகளுக்குப் பின் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் பிரவேசிப்பதற்கு அண்மையில் அனுமதி வழங்கப்பட்டது. பிரித்தானிய,கனடா, கிரீஸ், நியூசிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, ஆஸ்திரியா,அவுஸ்திரேலியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் அதிகம் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

கொரோனா தொற்றுநோய்க்கு முன்னர் வடகொரியாவிற்குப் பயணித்த சர்வதேச சுற்றுலாப் பயணிகளில் 90% க்கும் அதிகமானோர் சீனர்கள் என புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக மேற்கத்திய சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் நுழைந்த சில வாரங்களுக்குப் பிறகு, சுற்றுலாப் பயணிகள் வருகையை வட கொரியா தற்போது நிறுத்தியுள்ளது.