முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச மருத்துவ பரிசோதனைகளுக்காக இன்று காலை நாட்டில் இருந்து வெளியேறியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். மருத்துவ பரிசோதனைக்காக அவர் முன்னரே வெளிநாடு செல்வதற்கு திட்டமிட்டிருந்த போதிலும் ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகளுக்காக தனது பயணத்தை தாமதித்தார்.
நாட்டில் இருந்து வெளியேறவுள்ளதாக கட்சிக்கு ஏற்கனவே அறிவித்துள்ளார்.
இவ்வாறு மருத்துவ பரிசோதனை முடிவடைந்த பின்னர் பொதுத்தேர்தல் நடவடிக்கைகளின் போது கட்சியை வழிநடத்த நாட்டிற்கு திரும்புவார்.
என பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.