முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி விடுதலை!

0
155

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டு தாக்குதலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நாமல் பலல்லே, ஆதித்ய பட்டபெந்திகே மற்றும் மொஹமட் இஸ்சதீன் ஆகிய மூவரடங்கிய விசேட மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாமினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக, துல்லியமான புலனாய்வுத் தகவல்கள் கிடைக்கப்பெற்றிருந்த போதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை மூலம், கடமையை நிறைவேற்றத் தவறியமை உள்ளிட்ட 855 குற்றச்சாட்டின்கீழ், சட்டமா அதிபரால், முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.