இலங்கையில் மேலும் 1,635 பேர் பூரணமாக குணமடைந்தனர்!

0
163

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,635 பேர் இன்று (22) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 126,995 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் 158,333 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் இவர்களில் 1,132 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.