யாழ் பொலிஸ் பிராந்திய சிரேஷ்ர பொலிஸ் அத்தியட்சகராக ஜெகத் விசாந் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
சர்வ மத வழிபாடுகளுடன் அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக கடமை ஆற்றிய ஜெகத் விசாந்த பொலிஸ் மா அதிபர் அவர்களினால் யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை காலமும் சிரேஷ்ர பொலிஸ் அத்தியட்சசகராக கடமை ஆற்றிய உஜித் லியானகே அவர்கள், பிரதிப் பொலிஸ்மா அதிபராக காலி மாவட்டத்துக்கு இடமாற்றம் பெற்று சென்றுள்ளார்.