யாழ் போதனா வைத்தியசாலைக்கு சுக்சி குறூப் கம்பனியினால் நான்கு மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தலைமையில் நேற்று நடைபெற்ற நிகழ்வின் போது வைத்தியசாலையின் கண் சத்திர சிகிச்சை பிரிவிற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.குறித்த கம்பனியின் தலைவர் கணேசன் சுகுமாரின் ஏற்பாட்டில் அவரின் பிரதிநிதியாக வந்திருந்த இரத்தினசபாபதி இளங்கோவினால் வைத்தியசாலையின் கண் சத்திரசிகிச்சை நிபுணர் மலரவனிடம் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வில் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் பிரதி பணிப்பாளர் உள்ளிட்ட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் உபகரணம் வழங்கிய கம்பனியின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கடந்த இரண்டு வருடத்திற்கு முன்னரும் குறித்த கம்பனியால் யாழ் போதான வைத்தியசாலையின் மருத்துவ தேவைக்காக ஐந்து மில்லியன் ரூபா வழங்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.