ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் திறப்பு!

0
27

நேற்று (14) பெய்த பலத்த மழையினால் மல்வத்து ஓயா, வளவ கங்கை மற்றும் மகுரு ஓயா ஆகியவற்றின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.இதனடிப்படையில் இந்த நீர்த்தேக்கங்களைச் சூழவுள்ள தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டுமென நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை பலத்த மழையினால் ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் இதுவரை திறக்கப்பட்டுள்ளன.அதேபோன்று அங்கம நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.