ராம் கராத்தே சங்கத்தின் ஏற்பாட்டில் மறைந்த மாமனிதர் சிஹான் கே.இராமசந்திரன் ஞாபகார்த்தமாக நடாத்தப்பட்ட கராத்தே சுற்றுப்போட்டி அம்பாறை அக்கரைப்பற்று அல் சிறாஜ் பாடசாலை மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
ராம் கராத்தே சங்கத்தின் ஆலோசகரும் கிழக்கு மாகாண ராம் கராத்தே சங்கத்தின் தலைவருமான சிஹான் கே.சந்திரலிங்கம் தலைமையில்; சுற்றுப்போட்டி நடைபெற்றது. ராம் கராத்தே சங்கத்தின் ஸ்தாபகரும் பிரதம போதனாசிரியருமான சிகான் கே.ஹேந்திரமூர்த்தியின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற சுற்றுப்போட்டியில், பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன் கலந்து கொண்டார். விசேட அதிதியாக திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளர் ஆர்.உதயகுமார், இலங்கை கராத்தே சம்மேளனத்தின் தலைவர் சிஹான் எச்.எம்.சிசரகுமார மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன், கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் அதிசயராஜ், சட்டத்தரணியும் வைத்தியருமான சமீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பல பாடசாலைகளை சேர்;ந்த 200 ,ற்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்றனர். இவ்வருடம் இடம்பெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான கராத்தே சுற்றுப்போட்டியில் பங்குபற்றி தேசிய மட்ட போட்டி நிகழ்வுகளுக்கு தெரிவு செய்யப்பட்ட 13 மாணவ, மாணவிகள் திருக்கோவில் வலயக் கல்விப்பணிப்பாளர் உள்ளிட்ட அதிதிகளால் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் பிரதம அதிதிகளும் நினைவுச்சின்னம் வழங்கி
கௌரவிக்கப்பட்டனர். கரத்தே விளையாட்டுச் சார்ந்த பல்வேறு செயன்முறை பரீட்சைகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.