கடந்த மே மாதம் 9ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்னவின் வீடு, சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த, தீ மூட்டிய குற்றச்சாட்டில் இருவரை மேல் மாகாண குற்றப்புலனாய்வு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
ஊராபொல பிரதேசத்தை சேர்ந்த 27, 35 வயதுகளையுடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கிரிந்திவெல பிரதேசத்திலுள்ள வீடு, சொத்துக்களுக்கே தீமூட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த மேல் மாகாண குற்றப்புலனாய்வு பிரிவினர் சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளனர்.