வடக்கு புகையிரத சேவையில் இன்று முதல் மாற்றம்!

0
7

வடக்கு மார்க்கத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் புகையிரத சேவையின் பயண நேரத்தில் இன்று முதல் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதன்படி, கல்கிஸ்ஸ முதல் காங்கேசன்துறை வரை, வார இறுதி நாட்களில் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டு வந்த சொகுசு கடுகதி புகையிரத சேவையானது, இன்று முதல் நாளாந்தம் முன்னெடுக்கப்படவுள்ளது. 

அதேநேரம், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து காங்கேசன்துறை வரை சேவையில் ஈடுபடும் யாழ்தேவி புகையிரத சேவையின் நேரத்திலும், திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.