வரி அதிகரிப்பிற்கு எதிராக வங்கி ஊழியர்கள் பேரணி

0
169

அம்பாறை அக்கரைப்பற்றில், இன்று அரச மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள் அரசின் வரி அறவீட்டு திட்டத்திற்கு எதிராக தமது எதிர்ப்பினை தெரிவிக்கும் வகையிலான அமைதியான முறையில் பேரணியொன்றை முன்னெடுத்தனர்.
அக்கரைப்பற்று கொமர்ஷியல் வங்கியின் முன்பாக ஒன்றிணைந்த அவர்கள் அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியூடாக சென்று மணிக்கூட்டுக்கோபுரத்தை அடைந்து அங்கு சில நிமிடங்கள் தரித்து நின்று தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.
பல்வேறு சுலோக அட்டைகளையும் ஏந்தியவாறு வங்கி ஊழியர்களின் சம்பளம் மீதான வரி விதிப்பிற்கு எதிராக குரல் கொடுத்தனார் .