தொழிற்சங்கப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, இன்று மலையகத்தில் உள்ள பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் கறுப்புப் பட்டியணிந்து, கடமைக்கு சமூகமளித்திருந்தனர்.
ஹட்டன் உள்ளிட்ட பல பிரதேசங்களில் தனியார் மற்றும் அரச வங்கிகள் மூடப்பட்டிருந்தன.
இதேவேளை தபால் திணைக்களத்தின் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்திருந்த போதிலும் ஹட்டன், டிக்கோயா உள்ளிட்ட பல நகரங்களில் தபால் நிலையங்கள் திறந்திருந்ததுடன், தபால் விநியோக நடவடிக்கைகளும் இடம்பெற்றிருந்தன.