வர்த்தகர் தினேஷ் ஷாப்டர், உடலுக்குள் சயனைட் கலந்ததால் உயிரிழப்பு

0
179

பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் சயனைட் உடலுக்குள் கலந்ததால் உயிரிழந்ததாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று அளுத்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மரணத்திற்கான காரணம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட மருத்துவ சாட்சியங்கள் முரண்பாடானவை என ஷாப்டர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதியின் சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன தெரிவித்தார்.
ஒரே மருத்துவர் இரண்டு தடவைகள் மரணத்திற்கு இரண்டு காரணங்களை கூறியதாக அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்