வவுனியா ஓமந்தையில் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்ட வவுனியா மாவட்ட விளையாட்டுக் கட்டட தொகுதி இன்று திறந்து வைக்கப்பட்டது.
கடந்த 2015 ஆம் ஆண்டு சுமார் 16 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பித்து வைக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
இந்த நிலையில், கடந்த அரசாங்க காலத்தில் மீளவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
அதற்கமைய, குறித்த கட்டடத் தொகுதியில் உள்ளக விளையாட்டு அரங்கு மற்றும் நீச்சல் தடாகம் என்பன மேலும் 14 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டு சுமார் 30 கோடி ரூபா செலவில் புனரவைக்கப்பட்டு இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் விளையாட்டு துறை அமைச்சின் விளையாட்டு அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் ரியல் அட்மிரல் செமால் பெர்னான்டோ உதவி பணிப்பாளர் கே.டபிள்யு.டி.கே.கொஸ்தா மற்றும் வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ்.சரத் சந்திர ஆகியோர் பங்கேற்றனர்.