வாகன சாரதிகளுக்கான வேண்டுகோள்!

0
140

அடைமழை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் 50 மீட்டர் தூர இடைவௌியில் செல்லுமாறு நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதிவேக நெடுஞ்சாலைகளில், வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் எச்சரிக்கை இலத்திரனியல் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இருளான ஒரு சூழ்நிலை காணப்படுவதால், வாகனங்களின் முன்பக்க விளக்குகளை எரியவிட்டு வாகனங்களை இயக்குமாறு, வீதி போக்குவரத்து பொலிஸார் சாரதிகளுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர்.