வாழ்வாதாரத்துக்காக வரிசையில் நிற்கும் மக்களை முடக்குவதற்கான செயற்பாடுகளையே தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக இலங்கை வங்கி சேவையாளர் சங்கத்தின் உபதலைவர் தனுஷ;க குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவே கோட்டா- ரணில் தலைமையிலான அரசாங்கம் வந்ததாக கூறியது. அவ்வாறு கூறியே ஆட்சிபலத்தையும் ஏற்றது.
நாட்டு மக்களின் பிரச்சினையை தீர்ப்பதாகக் கூறியே ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பொறுப்பை ஏற்றார்.
எனினும் தற்போது என்ன செய்துகொண்டுள்ளார்கள்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.