விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ; போதைப்பொருட்களுடன் 408 பேர் கைது!

0
6

நாடளாவிய ரீதியில் நேற்று புதன்கிழமை (04) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 408 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 117 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 160 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 127 பேரும், போதை மாத்திரைகளுடன் 04 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 161 கிராம் 161 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 248 கிராம் 119 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 08 கிலோ 70 கிராம் 183 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளும், 4479 போதை மாத்திரைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.