தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை தொடர பிரித்தானியா முடிவு செய்துள்ளதாக, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
தமது எக்ஸ் தளத்தில் குறிப்பொன்றையிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய இராச்சியத்தின் தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மேல்முறையீட்டு ஆணையம்’ தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது என அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு கோரி
தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான மேன்முறையீட்டு ஆணைக்குழுவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால், முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டினை அந்த ஆணைக்குழு நிராகரித்துள்ளது.
அந்நாட்டின் உயர் நீதிமன்ற நீதியரசர் தலைமையிலான இந்த ஆணையம், பிரித்தானிய நாடாளுமன்றத்தால் நிறுவப்பட்ட ஒரு சுயாதீன நீதிமன்றமாகும்.