விமானப்படையின் ட்ரோன் கமெரா தியவன்னா ஓயாவில் விழுந்ததால் ஐந்து இலட்சம் ரூபாய் நட்டம்

0
142

பாராளுமன்ற பாதுகாப்புக்காக பயன்படுத்தப்பட்ட ட்ரோன் கமெராவானது தியவன்னா ஓயாவில் விழுந்ததால் சுமார் ஐந்து இலட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த ட்ரோன் கமெரா பயன்படுத்த முடியாதளவு சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான ட்ரோன் கமரொவே தியவன்னா ஓயாவில் விழுந்து சேதமடைந்துள்ளது.

கடந்த மாதம் 20ஆம் திகதி பாராளுமன்ற பாதுகாப்பு தொடர்பில் அறிந்துகொள்வதற்காக அனுப்பப்பட்ட ட்ரோன் கமெராவே தியவன்னா ஓயாவில் விழுந்து விபத்துக்குள்ளானது.

ட்ரோன் கமெராவின் பெட்டரி செயலிழந்ததால் ட்ரோன் கமெரா விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன்போது ட்ரோன் கமெராவை மிகக் கவனமாக தரையிறக்குவதற்கு விமானப்படை வீரர்கள் எவ்வளவோ முயற்சித்த போதிலும் அது தோல்வியில் முடிந்ததாக தெரியவந்துள்ளது.

இவ்வாறு தியவன்னா ஓயாவில் விழுந்த ட்ரோன் கமெரான அண்மையில் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.