வீதி விபத்துக்கள் குறித்து பாடசாலை மாணவர்களால் விழிப்புணர்வுப் பேரணி

0
381

முல்லைத்தீவு பாலிநகர் குமார சுவாமி வித்தியாலய மாணவர்களால் ‘வாகனச் சாரதிகளே எங்களின் உயிர்களையும் மதியுங்கள்’ என்ற கோரிக்கையுடன் விழிப்புணர்வுப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

வீதி விபத்துக்களை தடுக்கும் விதத்திலும் வீதி விபத்துக்கள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் முல்லைதீவு துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட பாலிநகர் குமாரசுவாமி வித்தியாலய மாணவர்களால் கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பேரணியானது பாடசாலை முன்றலில் முன்னெடுக்கப்பட்டதுடன், வீதி விபத்துக்களை தவிர்ப்போம், வீதியால் செல்லும் பாதசாரிகளின் உயிர்களையும் மதியுங்கள், வாகனம் செலுத்துபவரே அவதானமாக வாகனத்தை செலுத்துங்கள், வீண் விபத்துக்களை தவிர்ப்போம் போன்ற வாசகங்கள் எழுதிய சுலோக அட்டைகளை தாங்கியவாறு மாணவர்கள் பேரணியில் பங்குபற்றியிருந்தனர்.

குறித்த பேரணியில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.