Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711
Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711
Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711
Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
பொரலஸ்கமுவ, எம்பில்லவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த ஜுன் மாதம் 26ஆம் திகதி காரை திருடிய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.வீட்டின் கேரேஜில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெகன் ஆர் காரை சந்தேகநபர்கள் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது சந்தேகநபர் ஒருவர் ஹோமாகமவில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.விசாரணைகளின் போது கொள்ளைக்கு உதவிய மற்றுமொரு ஆணும் பெண்ணும் ஹோமாகமவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட போது திருடப்பட்ட வாகனமும் அவர்களிடம் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்டவர்கள் குறித்த ஆண்கள் இருவரும் 31 மற்றும் 34 வயதுடையவர்கள் எனவும்,ஹோமாகம மற்றும் ஹொரண பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.பெண் உடுபுஸ்ஸல்லாவ பிரதேசத்தை சேர்ந்த 25 வயதான பெண் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சந்தேகநபர்கள் இன்று நுகேகொட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.