28 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

அக்கரைப்பற்று ஸ்ரீ வீரம்மாகாளியம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடு

நாட்டில் பரவிவரும் கொரோனா தொற்றுநோயிலிருந்து மக்களை பாதுகாக்கவும் நாட்டில் இருந்து இந்நோய் அகல வேண்டும் எனவும் மதஸ்தலங்களில் பிரார்த்தனை செய்யுமாறும் நாட்டு மக்களும் வேண்டுதலில் ஈடுபடுமாறும் பிரதமரின் வழிகாட்டலின் கீழ் இந்து சமய திணைக்களமானது கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்கமைவாக அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பிரார்த்தனை நிகழ்வு மற்றும் விசேட பூஜை வழிபாடுகளும் அக்கரைப்பற்று ஸ்ரீ வீரம்மாகாளியம்மன் ஆலயத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடைபெற்றது.

அமைப்பின் தலைவர் க.சுந்தரலிங்கம் தலைமையில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை ஆலய உற்சவகால குரு தவத்திரு க.யோகானந்தம் பூசகர் நடாத்தி வைத்தார்.

வழிபாடுகளில் நாட்டில் இருந்து கொரோனா நோய் முற்றாக அகலவேண்டும் எனவும் நாட்டு மக்களும் நலமுடன் இருக்க வேண்டும் எனவும் அரசாங்கத்திற்கு நல்லாசி வேண்டியும் பிரார்த்தனைகள் இடம்பெற்றன.

நிகழ்வில் அமைப்பின் உறுப்பினர்கள் பொதுமக்கள் என மட்டுப்படுத்தப்பட்ட சிலர் கலந்து கொண்டனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles