29 C
Colombo
Friday, December 1, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

அடுத்த வாரம் பாராளுமன்ற அலுவல்கள் ஒரு தினத்திற்கு மட்டும்!

2020 ஆம் நிதியாண்டுக்குரிய சேவை செலவினங்களுக்காக நிதி அமைச்சர் சமர்ப்பித்த நிதி ஒதுக்கீட்டுப் பிரேரணையை அடுத்த மாதம் 12 ஆம் திகதி நிறைவேற்றுவதென பாராளுமன்ற அலுவல்களுக்கான தெரிவுக்குழு நேற்று தீர்மானித்துள்ளது.

இந்தக் குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. இதன்போது, கொவிட்-19 தொற்றுப் பரவலை கருத்தில் கொண்டு அடுத்த வாரத்திற்குரிய பாராளுமன்ற நடவடிக்கைகளை ஒரு நாளைக்கு மாத்திரம் மட்டுப்படுத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முற்பகல் தொடக்கம் நண்பகல் 12 மணி வரை மாத்திரம் பாராளுமன்றம் கூடும்.

சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி மருத்துவ கட்டளைச் சட்டத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு கட்டளைகள் அன்றைய தினம் விவாவதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். பாராளுமன்ற உறுப்பினர்கள் வாய்மூல பதிலைஎதிர்பார்த்து சமர்ப்பிக்கும் கேள்விகளுக்கான அமர்வு இடம்பெற மாட்டாது.

அதேவேளை, பாராளுமன்ற அமர்வு இடம்பெறும் தினத்தன்று பாராளுமன்ற உறுப்பினர்கள், அழைக்கப்பட்ட உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தவிர வேறு எவரும் பாராளுமன்றத்திற்கு செல்ல அனுமதி கிடையாது. ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி இல்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

எரிபொருள் விலையில் திருத்தம்!

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது. ஒக்டேன் 92 பெட்ரோல் 10 ரூபாய் குறைக்கப்பட்டு...

மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

2022 (2023) - கல்விப் பொதுத் தராதர சாதார தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியாகியுள்ள நிலையில், www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk என்ற இணையத்தளங்களில் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

எரிபொருள் விலையில் திருத்தம்!

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது. ஒக்டேன் 92 பெட்ரோல் 10 ரூபாய் குறைக்கப்பட்டு...

மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

2022 (2023) - கல்விப் பொதுத் தராதர சாதார தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியாகியுள்ள நிலையில், www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk என்ற இணையத்தளங்களில் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள்...

ரிதிகமவில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பில் மூவர் கைது

ரிதிகமஇ கல்லவத்தஇ நிகபிட்டியவில் வீடொன்றில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பில் 3 பேர் 48 மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். குடியிருப்பு ஒன்றில் வெடிப்புச் சம்பவம் தொடர்பில்...

காஸாவில் மீண்டும் போரை தொடங்கியது இஸ்ரேல்

 7 நாட்கள் போர்நிறுத்தத்தை நிடிப்பதற்கான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், ஹமாஸ் மீதான போரை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியுள்ளது. ஹமாஸ் போர்நிறுத்தத்தை மீறியதாக குற்றம்சாட்டி மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளதாக...