32 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

அட்டனில் ஒருவருக்கு கொரோனா; சந்தைத் தொகுதி மூடப்பட்டது!

அட்டன் நகரிலுள்ள மீன் விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக அட்டன் டிக்கோயா நகரசபை பொது சுகாதர பரிசோதகர் தெரிவித்தார்.

பேலியகொடை மீன் சந்தையில் மீன் கொள்வனவு செய்து விற்பனை செய்பவர்கள் என அடையாளம் காணப்பட்ட மீன் விற்பனை நிலையங்கள் நேற்று முன்தினம் மூடப்பட்டு அங்கு வேலை செய்தவர்களை பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உற்படுத்தியபோதே மேற்படி நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந் நிலையில் இன்று அட்டன் நகர் பொதுச் சந்தை உள்ளிட்ட சில பகுதிகள் பொது மக்களின் பயன்பாட்டிலிருந்து முடிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த நபரின் குடும்பத்தினரையும் ஐ.டி.எச் மருந்துவமனைக்கு அழைத்து செல்லப்படவுள்ளனர்.

மேலும் அடையாளம் காணப்பட்ட நபருடன் நேரடி தொடர்பிலிருந்தவர்கள் மற்றும் அவர் சென்ற இடங்களை அடையாளம் கண்டு அவர்களை சுய தனிமைக்குற்படுத்தப்படவுள்ளதாக பொது சுகாதார பரிசோதர்களும் பாதுகப்பு பிரிவினரும் தெரிவித்தனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles