அதிக விலைக்கு பொருட்களை விற்போர் மீது சட்ட நடவடிக்கை: இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் அதிரடி

0
116

பொருளாதாரச் சுமையைக் குறைப்பதற்கு அரசாங்கம் முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வோரைக்
கண்டறிய சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வெல்த் கோப் வங்கியின் நான்காவது கிளை இன்று மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதான வீதியில் இன்று காலை
திறந்து வைக்கப்பட்டது.
வெல்த் கோப் வங்கியின் தலைவர் தேசகீர்த்தி மொகோட்டடி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்
பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திருமதி தட்சணகௌரி டினேஸ், மண்முனைப்பற்று பிரதேசசபையின் செயலாளர் சர்வேஸ்வரன்,
பிரதம நிறைவேற்று அதிகாரி காஞ்சன பபசர மனஞ்சேன, வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.