உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு, அம்பாறை கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தில் மாம்பழ அறுவடை நிகழ்வு இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் மஜிதிய்யா தலைமையில் இடம்பெற்ற அறுவடை நிகழ்வில், சுமார் 100ற்கும் அதிகமாக அறுவடை செய்யப்பட்ட டொம் டேசி மாம்பழ
இனங்கள் முதற்கட்டமாக அதிதிகளால் உத்தியோகபூர்வமாக வெட்டப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன.
நிகழ்விற்குப் பிரதம அதிதியாக கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் ச{ஹதுல் நஜீம் கலந்து கொண்டார்.
மாணவர்களின் சுற்றாடல் சார் நடவடிக்கைகள் இந்த அறுவடை செயற்பாட்டில் தங்கி இருப்பதாகவும் அதிதிகள் குறிப்பிட்டனர்.
மாம்பழ அறுவடை நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஜாபிர், முன்னாள் பாடசாலை அதிபர் கமால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
குறித்த நூற்றுக்கணக்கான மாம்பழ அறுவடைக்கு முன்னர் மாம்பழ உற்பத்திக்கான பங்களிப்பினை, யாழ்ப்பாணத்தில் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர் மனோகரன் சசிகரன்
ஊடகவியலாளர் பாறுக்; சிஹான் ஊடாக, ஒரு தொகுதி பொதி செய்கின்ற பைகளை வழங்கி ஊக்கப்படுத்தி ஆலோசனை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.v