அவுஸ்திரேலியா மற்றும் இலங்கையிடையிலான 2025 இல் இரண்டு ஒருநாள் போட்டிகள் இரண்டு டெஸ்ட் போட்டிகளாக இடம்பெறும்

0
16

இலங்கையில் 2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அவுஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் முன்னர் திட்டமிடப்பட்ட ஒற்றை போட்டிக்கு பதிலாக இரண்டு ஒருநாள் போட்டிகள் இடம்பெறும் என இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

திருத்தப்பட்ட சுற்றுப்பயண அட்டவணையில் இப்போது இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் இரண்டு ஒருநாள் போட்டிகள் அடங்கும். டெஸ்ட் போட்டிகள் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 29 முதல் பிப்ரவரி 2 வரையிலும், இரண்டாவது டெஸ்ட் பிப்ரவரி 6 முதல் 10 வரையிலும் நடைபெறும்.

சர்வதேச ஒருநாள் போட்டிகள் ஹம்பாந்தோட்டையில் உள்ள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள நிலையில்இ புதிய மைதானம் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானமாகும்.

முதல் ஒருநாள் போட்டி பெப்ரவரி 12ஆம் தேதியும்இ இரண்டாவது ஒருநாள் போட்டி பெப்ரவரி 14ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. அவுஸ்திரேலிய அணி ஜனவரி 24இ 2025 அன்று இலங்கைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.