அஸ்வெஸ்ம நலன்புரி திட்டம்தொடர்பில், விசேட விழிப்புணர்வுநிகழ்வு

0
82

அஸ்வெஸ்ம நலன்புரி திட்டத்தின் பயனாளிகளின் குடும்பங்களுக்கான வழுவூட்டல் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ், மாவட்ட சமுர்த்தி திணைக்கள உத்தியோகஸ்தர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.


மாவட்ட சமுர்த்தி திணைக்கள பணிப்பாளர் எஸ்.ராஜ்பாபுவின் ஏற்பாட்டில், மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெக்சுவல் பிரதம அதிதியாக
கலந்து கொண்டார்.


நேர்மறை எண்ணத்தில் இருந்து மேம்பட்ட மனநிலைக்கு பயனாளிகளை அழைத்து செல்ல அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டதோடு, வழுவூட்டலுக்கான திட்டங்கள் குறித்தும் அதிகாரிகளுக்கு தெளிவூட்டப்பட்டது.


அஸ்வெஸ்ம நலன்புரி திட்டம் தொடர்பான செயற்றிட்ட காணொளி விவரணமும் இடம்பெற்றது. சமுர்த்தி திணைக்கள அதிகாரிகள் ,பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்