28 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஆங்கில மொழி மூலமான தொடர்பாடலை அதிகரிக்கும் செயற்றிட்டம் யாழில் ஆரம்பம்

அகில இலங்கை ரீதியாக ஆங்கில மொழி மூலமான தொடர்பாடல் திறனை அதிகரிக்கும் நோக்கில், முன்னெடுக்கப்படும் செயற்திட்டம் இன்றைய தினம் யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாதசுந்தரமும், கௌரவ விருந்தினர்களாக கல்வி கலாச்சார விளையாட்டு, இளைஞர் விவகாரம் மற்றும் பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் உமா மகேஸ்வரன், வட மாகாண கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்டர்ஸ் ஆகியோரும் கலந்துகொண்டு இந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.

இதன் போது மாணவர்களின் கலை நிகழ்வுகளும், இத்திட்டத்தின் பிரதான நிகழ்வான திறன் வகுப்பறையில் ஆங்கில மொழி மூலமான கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இச் செயற்றிட்டமானது நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளிலும் ஒவ்வொரு நாளும் பத்து நிமிடங்கள் ஆங்கில மொழியை செவிமடுத்தல் மற்றும் உரையாடுதல் மூலமாக ஆங்கில மொழியை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles