29 C
Colombo
Friday, December 1, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

இப்படியும் நடக்கிறது…!

இன்றைய இந்தப் பத்தியை நான் எழுதப் போவதில்லை.
எழுதப் போகின்றவர் உங்கள் எங்கள் எல்லோருக்கும் நன்கு தெரிந்த ஒருவர்.
உங்களில் பலர் இதனை படித்தும் இருக்கலாம்.
ஆனாலும் இது ஒரு பதிவாக இந்தப் பத்தியில் வரவேண்டும் என்று இந்த ஊர்க்குருவி விரும்பியதால் இங்கே மீள்பிரசுரம் செய்யப்படுகின்றது.
அண்மையில், கொழும்பில் நடைபெற்ற மணவைத்தம்பியின் புதல்வர் மணவை அசோகனின் மணிவிழாவில் கலந்துகொண்டு தான் சொன்ன கருத்தை அவர் தனது முகநூலில் பதிவுசெய்திருந்தார்.
அதனை இங்கே அப்படியே தருகின்றேன்.
‘சும்மா கலைஞர் கருணாநிதியை கரித்து கொட்டுவதை நிறுத்துங்கள்! இலங்கையில் தமிழர்களின் எல்லா இழப்புகளுக்கும் தமிழக அரசியல்வாதிகளையும் இந்திய தலைவர்களையும் காரணமாகக் காட்டுவதை நிறுத்துங்கள்! இலங்கையில் தமிழர்கள் கண்டுவிட்ட இழப்புகளுக்கு முதற்காரணம் இலங்கை தமிழ் அரசியல் மேதைகள்.
இரண்டாவது காரணம், கொலைகார சிங்கள பேரினவாத அரசுகள்.
1940களில் கண்டிய சிங்கள தலைமைகளே தர வந்த சமஷ்டியை எட்டி உதைத்து யார்? 65:35 என்ற ஜன பரம்பலுக்கு, நியாயமே அற்ற 50:50 என்ற கோதாரி கோரிக்கையை முன் வைத்து, பிரிட்டிஷ்காரனே கைவிரிக்கும் நிலைமையை ஏற்படுத்தியது யார்? 1987இல் வடக்கு – கிழக்கு மாநிலம் என்ற அடிப்படையை ஆரம்பித்து வைத்த, இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை, மாகாண சபைகளை எட்டி உதைத்தது யார்? இன்று, ‘பிச்சை வேண்டாம், நாயை பிடி!’ என்று, 13ஐ யாவது முழுமையாக அமுல் செய்யுங்களேன் என ஓலமிடுவது யார்? இந்திய நாட்டு பிரதமராக இருந்த – இருக்கவிருந்த, ராஜீவையே போட்டு தள்ளி விட்டு இப்போது இந்திய அரசு தலைவர்களிடம் அதிகாரிகளிடம் கோரிக்கை மேல் கோரிக்கை வைப்பது யார்? இன்றும்கூட சகோதர முஸ்லிம் மக்களின் தேசிய அபிலாசைகளை உள்வாங்காமல், வடக்கு – கிழக்கு இணைப்பு என நிபந்தனை விதிப்பது யார்? கருணாநிதியும் இந்தியத் தலைவர்களும் அதி உத்தமர்கள் என நான் கூற வரவில்லை.
கருணாநிதியை கருணை நிதி என நான் கூறவில்லை.
ராஜீவ் காந்தியை மகாத்மாகாந்தி என நான் கூற வரவில்லை.
ராஜீவ் அனுப்பி வைத்த ஐ. பி. கே. எவ். இங்கே கொலைகள், பாதகங்கள் செய்யவே இல்லை என நான் கூற வரவில்லை.
ஆனால், தமது ‘தேச நலன்கள்’ அவரவருக்கு முக்கியம் என்பதும், இந்தியர்கள் எமக்காக வரக்கூடிய தொடுவானம் எதுவரை என்பதும் நமது அரசியல் மேதைகளுக்கு விளங்கி இருந்திருக்க வேண்டும் கருணாநிதியோ, ஜெயலலிதாவோ, எம். ஜி. ஆரோ, இன்று ஸ்டாலினோ தமக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்தும் எட்டு கோடி தமிழருக்குதான் முதலில் பொறுப்புக்கூறக் கடமைபட்டுள்ளார்கள்.
இதிலும்கூட, கருணாநிதி இலங்கை தமிழருக்காக இரண்டு முறை தனது ஆட்சியை இழந்தார் என்பது இங்கே எத்தனை மேதைகளுக்கு ஞாபகம் இருக்கிறது? ஆகவே, சும்மா கலைஞர் கருணாநிதியை கரித்துக் கொட்டுவதை நிறுத்துங்கள்! முதலில் சுயவிமர்சனம் செய்ய ஆரம்பியுங்கள்! விடை கிடைக்கும்!! நான் சும்மா ஊருக்கு உபதேசம் செய்யவில்லை.
அனுபவத்தைப் பகிர்கிறேன்.
எனக்குப் பின்னடைவு ஏற்பட்டால் காரணத்தை எனக்குள்ளேதான் நான் தேடுகிறேன்.
வரலாறு எனக்கு இதை கற்றுக் கொடுத்திருக்கின்றது.
ஆகவே, விடை கிடைக்கிறது.’
இதுவே, அந்த தலைவர் ஆற்றிய உரை.
இந்த உரையை ஆற்றக்கூடிய துணிவும் நெஞ்சுரமும் யாருக்கு இருக்கும் என்று தெரிந்தவர்களுக்கு அவர் பெயரைக் குறிப்பிடவேண்டும் என்பதல்ல.
ஆனாலும், தெரியாதவர்களுக்காக, இந்த வரிகளுக்கு சொந்தக்காரர், மனோ கணேசன் மட்டுமே.!

  • ஊர்க்குருவி

Related Articles

எரிபொருள் விலையில் திருத்தம்!

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது. ஒக்டேன் 92 பெட்ரோல் 10 ரூபாய் குறைக்கப்பட்டு...

மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

2022 (2023) - கல்விப் பொதுத் தராதர சாதார தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியாகியுள்ள நிலையில், www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk என்ற இணையத்தளங்களில் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள்...

ரிதிகமவில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பில் மூவர் கைது

ரிதிகமஇ கல்லவத்தஇ நிகபிட்டியவில் வீடொன்றில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பில் 3 பேர் 48 மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். குடியிருப்பு ஒன்றில் வெடிப்புச் சம்பவம் தொடர்பில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

எரிபொருள் விலையில் திருத்தம்!

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது. ஒக்டேன் 92 பெட்ரோல் 10 ரூபாய் குறைக்கப்பட்டு...

மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

2022 (2023) - கல்விப் பொதுத் தராதர சாதார தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியாகியுள்ள நிலையில், www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk என்ற இணையத்தளங்களில் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள்...

ரிதிகமவில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பில் மூவர் கைது

ரிதிகமஇ கல்லவத்தஇ நிகபிட்டியவில் வீடொன்றில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பில் 3 பேர் 48 மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். குடியிருப்பு ஒன்றில் வெடிப்புச் சம்பவம் தொடர்பில்...

காஸாவில் மீண்டும் போரை தொடங்கியது இஸ்ரேல்

 7 நாட்கள் போர்நிறுத்தத்தை நிடிப்பதற்கான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், ஹமாஸ் மீதான போரை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியுள்ளது. ஹமாஸ் போர்நிறுத்தத்தை மீறியதாக குற்றம்சாட்டி மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளதாக...

முதல் ஒன்பது மாதங்களில் 485 எயிட்ஸ் நோயாளர்கள்இ 43 இறப்புகள் பதிவு

இந்த ஆண்டு செப்டெம்பர் மாத இறுதிக்குள் இலங்கையில் எச்.ஐ.வி/எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது.தேசிய STD/AIDS கட்டுப்பாட்டுத் திட்டத்தின்படி, இலங்கை 485 பதிவுசெய்துள்ளது, இது 2022 இல்...